சவாலான வேடங்களில் நடிப்பேன் : ஜெயம் ரவி!!

420

jayam_raviஜெயம் ரவி தற்போது பூலோகம் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே ஜெயம்ரவி நடித்துள்ள 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்துள்ளார்.

தாஸ் படத்தில் கால்பந்தாட்ட வீரராகவும், எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்துச்சண்டை வீரராகவும், பேராண்மை படத்தில் என்.சி.சி. பயிற்சியாளராகவும் நடித்தார். இதுகுறித்து ஜெயம் ரவி கூறியதாவது..

எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உண்டு. அதுவே எனக்குள் ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் கற்று தந்தது. நான் எனக்குள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணர்கிறேன். ஒரு விளையாட்டு வீரனுடைய மனநிலையில்தான் வெற்றி–தோல்விகளையும் எதிர்கொள்கிறேன்.

விளையாட்டு துறைக்காகவும், விளையாட்டு போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் எனது கனிசமான நேரத்தையும், சக்தியையும் செலவிட இருக்கிறேன். நிறைய படங்களில் நான் விளையாட்டு வீரனாக நடிப்பது திட்டமிட்டு நடப்பது இல்லை. எனக்கு சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக உள்ளேன்.

தற்போது நடித்து வரும் நிமிர்ந்து நில், பூலோகம் ஆகிய இருபடங்களிலும் சவாலான வேடங்களே அமைந்துள்ளது. ரசிகர்களை நிச்சயம் இது கவரும் என்று ஜெயம்ரவி கூறினார்.