வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றனர் : ப.சத்தியலிங்கம் கேள்வி!!

327

வவுனியாவில் நேற்று (11.11.2017) இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குதுவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வரவு செலவு திட்டத்தில் முன்னேற்றகரமான திட்டங்கள் வந்திருக்கிறது. பெண்களை தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேன்மை படுத்துவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் வந்திருக்கின்றது.

வீட்டுத்திட்டம் வந்திருக்கின்றது, இங்கே படித்த இளைஞர்கள், யுவதிகள் வேலை வாய்ப்புக்காக சில அபிவிருத்தி திட்டங்களை இங்கே கொண்டு வருவதற்கும் இருக்கின்றார்கள். சின்னச்சின்ன தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்குமுரிய முன்மாதிரிகள் இந்த முறை வரவு செலவுத்திட்டத்திலே கொண்டுவந்திருக்கின்றார்கள்.

ஆனால் வவுனியாவிலே எந்த ஒரு முன் மொழிவையும் காணவில்லை. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்து போடுபடவில்லையா? அல்லது எங்கடைய ஆட்கள் கொடுக்காமல் விட்டினமோ தெரியவில்லை.

பாராளுமன்றத்திற்கு போனால் மக்கள் பிரதிநிதிகளும் கதைப்பது பிரயோசனம் இல்லாத கதைதானே. எந்த நேரமும் வவுனியாவில் இருந்து எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டங்களை கொண்டு போய் கொடுத்திருக்க வேண்டும். வவுனியா மாவட்டத்திலே என்ன என்ன தொழில் திட்டங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கொடுத்திருக்க வேண்டும்.

கேட்டார்களா? கேட்கவில்லையா என்பதை இந்த முறை எங்களுடைய வரவு செலவு திட்டத்திலே வவுனியா என்ற வார்த்தையே காணவில்லை. ஆனால் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வந்திருக்கின்றன.

அபிவிருத்தி என்று பார்க்கும் போது வவுனியா என்ற சொல்லையே காணவில்லை. எங்கடைய ஆட்கள் கொடுத்தினமோ கொடுக்கலையோ தெரியவில்லை. இப்படியான விடயங்களை கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.