இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்துமாறு மகஜர்..

524

vhp

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் குறித்த ஆலயங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியும் விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் இன்று காலை மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது..

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்து மக்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளனர்.



இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் இந்து ஆலயங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து வணக்கஸ்தளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்க அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல் கலந்து கொண்டிருந்தார். குறித்த மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக விஸ்வ ஹிந்து பர்சஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.