சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!!

275

sachinதனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.

அரியானா- மும்பை அணிகள் மோதும் ரஞ்சி கிண்ண லீக் ஆட்டம் லாஹ்லி பன்சிலால் மைதானத்தில் வருகிற 27ம் திகதி தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின் அதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்த ரஞ்சி கிண்ணப் போட்டியில் விளையாட உள்ளார்.

மும்பை அணிக்காக சச்சின் விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை 8 ஆயிரம் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்க அரியானா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முதலில் வரும் 8 ஆயிரம் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனது 199வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் சச்சின் விளையாட உள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடக்கிறது. இந்நிலையில் சச்சினை பெருமைப்படுத்தும் விதமாக இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளில் அவரது படத்தை அச்சிட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் சபையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.