அகர்கர் ஓய்வு பெற்றது ஏன்?

348

Cricket - ODI , Australia v Indiaஇந்திய அணி வீரர் அகார்கர் ஓய்வு பெற முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரர் அகர்கர் கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார்.

இவர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரஞ்சி தொடரில் மும்பை அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

இந்நிலையில் ஓய்வு பெற்றது குறித்து அகார்கர் கூறுகையில் கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விட்டேன் என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன். இது நடக்காது என தெரிந்தவுடன் ஓய்வை அறிவித்து விட்டேன். இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை இந்த ஆண்டு உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை.

வேகப்பந்துவீச்சிலும் திறமை வெளிப்படுத்த முடியவில்லை. இது தான் கிரிக்கெட் விளையாடியது போதும் என்ற மனநிலைக்கு வர காரணமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.