வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து பௌத்த பிக்குவிடம் விசாரணை!!

1478

monkவவுனியாவில் சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆண் பிள்ளை ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அக்காப்பகத்தை நடத்தும் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த சிறுவர் காப்பகத்தில் 10 முதல் 18 வயதுடையவர்கள் தங்கியுள்ளனர். இந்தநிலையில் 18 வயதான ஒருவரே தாம் பௌத்த பிக்குவால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக பொலிஸில் முறையிட்டுள்ளார்.

எனினும் பொலிஸார் இது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பௌத்த பிக்குவின் கண்காணிப்பில் இருந்த 22 பிள்ளைகளும் களுத்துறையில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.