உலக முடிவு நெருங்கிவிட்டது : ரஷ்ய ஜனாதிபதியை எச்சரித்த மதகுரு!!

1019

 
உலக முடிவு நெருங்கிவிட்டதாகவும், இந்த பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள தேவாலயத்தின் தலைவரான Patriarch Kirill இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

உலக முடிவுக்கான அறிகுறிகள் வெற்றுக் கண்களுக்கே தென்படத் துவங்கியுள்ளதாக கூறும் அவர், ஒருமித்த கருத்தாக்கம் கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு இந்த அழிவை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

தாய்நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் இந்த மாபெரும் போரில் களமிறங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் எந்த வகையான அச்சுறுத்தல் உலக அழிவை நோக்கி நெருங்குவதாக அவர் குறிப்பிடவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு பேசிய இவர், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக ஆதரிப்பது என்பது உலக முடிவுக்கான முதல் அறிகுறி என கருத்து தெரிவித்திருந்தார்.