வவுனியா மாணவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

668

vavuniyaவவுனியா மாவட்டத்தில் கடந்த புலமைப் பரிசில் பரிட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற 45 மாணவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

பிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி கூறினார்.

நகர்புற மாணவர்களைப் போல கிராமப்புற மாணவர்களும் தற்போது கல்வியில் முன்னேறி உலகை வெற்றி கொள்ள முன்னோக்கி வருவதையிட்டு தாம் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி மாணவர்களிடம் தெரிவித்தார்.