உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் : சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

530

 
பிரான்சில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பெரும் விபத்தில் இருந்து 50 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.

மாரிஸ் ரைட்ஸன்(63) என்ற பிரித்தானிய பேருந்து ஓட்டுனர் 50 பயணிகளுடன் பிரெஞ்சு அல்ப்ஸ் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் குறித்த பேருந்தில் பிரேக்குகள் செயல்படாததை அறிந்த அவர் சமயோசிதமாக மலையில் மோதியுள்ளார்.

கடந்த 2013 ஏபரல் மாதம் நடந்த இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே ஓட்டுனர் ரைட்ஸன் உயிரிழந்தார். ஆனால் குறித்த பேருந்தில் இருந்த 50 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளதால் பயணிகள் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து தப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டதில் ஓட்டுனர் ரைட்ஸனின் சமயோசித முடிவே பெரும் விபத்தில் இருந்தும் உயிர்ச்சேதத்தில் இருந்தும் காத்துள்ளதாக பெர்விக் கொரோனெர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nathan Woodland என்ற சக ஓட்டுனரின் மொழியும் ரைட்ஸனின் சமயோசித மூடிவை நீதிமன்றத்தில் உறுதி செய்யும்படியாகவே அமைந்திருந்தது.

இந்த விபத்தில் ரைட்ஸனுடன் அந்த பேருந்தும் எரிந்து சாம்பலானது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.