வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா எதிர்வரும் 22-10-2013 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு கூமாங்குளம் முதியோர் சங்கத்தலைவர் திரு.பிலிப்பு வரப்பிரகாசம் தலைமை தாங்குகிறார்.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வவுனியா அரசாங்க அதிபர் திரு .M .K .பந்துல ஹரிச்சந்திர அவர்கள் கலந்து கலந்து கொள்வதோடு, கௌரவ விருந்தினர்களாக திரு.கா.உதயராசா (பிரதேச செலாளர் வவுனியா), திரு.நா.கமலதாசன் (பிரதேச செலாளர் வெ.செட்டிகுளம்) ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியர் க.இராமச்சந்திரன் (தலைவர் வவுனியா மாவட்ட முதியோர் சமாசம்), கிராம அலுவலர் திருமதி.துசிதா புஸ்பராஜா, வைத்தியர் .மு.மதிதரன் (கிசான் மெடிக்கல் சென்டர் கூமாங்குளம்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
(முதியோர் சங்கம் ,ஸ்டார் அமைப்பு)







