வவுனியாவில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம்நடுகை நிகழ்வு!!

897

 
தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனபாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.

மீள் மரநடுகை தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே சமயம் வவுனியா மாவட்டத்திலும் மீள மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன, முன்னாள் அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பொலிசார், விமானப்படையினர் எனப் பலரும் இவ் மரநடுகை வேலைத்திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.