இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.
கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார்.
பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உடலை துண்டு துண்டாக சிதைத்து சாக்கு மூட்டையில் போட்டு அடைத்துள்ளனர்.
மூட்டையை தூக்கி வீச அதனை காரில் கொண்டு சென்ற முயன்றபோது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரும் அகப்பட்டுக் கொண்டனர்.
கள்ளக்காதலை அறிந்த கணவன் தாராசந்த் கடுமையாக மனைவியை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கணவனை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.





