புகையிரதத்தில் மற்றும் புகையிரதப் பாதைகளில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 24 பேர் பலி!!

322

கடந்த 10 மாதங்களில் புகையிரதத்தில் இருந்தும் புகையிரதப் பாதைகளில் வைத்தும் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது நடந்த விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் மோதிய 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 76 புகையிரத பயணிகள் புகையிரதத்தில் இருந்து விழுந்துள்ளனர்.

வருடா வருடம் புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், புகையிரத பாதை மற்றும் புகையிரத கடவைகள் ஊடாக பயணிக்கும் போது 436 விபத்துக்கள் நடந்துள்ளன.

முழுயாக கடந்த 10 மாதங்களில் நடந்த புகையிரத விபத்துக்கள் காரணாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை தவிர வாகனங்கள் புகையிரத கடவைகளில் உள்ள கேட்டுகளில் மோதி சேதமடைந்தமை சம்பந்தமான 506 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.