டைனோசர்களை அழித்த ஆபத்தான விண்கல் : மீண்டும் பூமியை நெருங்குவதாக எச்சரிக்கை!!

271

பூமியை அண்மித்த பகுதியில் பாரிய விண்கல் ஒன்று பயணிக்கவுள்ளதாக வானியல் ஆய்வு நிலையங்கள் எச்சரித்துள்ளன.

சுமார் ஐந்து கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட விண்கல் ஒன்று எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்காவின் நாசா நிறுவனம் உட்பட உலக புகழ்பெற்ற வானியல் ஆய்வு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

கிரேக்க இலக்கியத்திற்கமைய பூமியை அழித்த கடவுளின் பெயரிடப்பட்டுள்ள இந்த பாரிய விண்கல் “பெஹேதன் 3200” என அழைக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி “பெஹேதன் 3200” என அழைக்கப்படுகின்ற விண்கல் 6.4 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனுக்கு அருகில் பயணிக்கவுள்ளது.

விண்வெளி தொலைவுகளின் அடிப்படையில், குறித்த விண்கல் பூமிக்கு அருகில் பயணிக்கும் என் விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டைனோசர் யுகத்தில் பூமியில் மோதுண்டு, குறிப்பிடத்தக்க உயிர்களை அழித்ததும் இவ்வாறான ஒரு விண்கல் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.