மாணவியின் உயிரைப் பறித்த காதல்!!

292

இரத்தினபுரி, மெதகம பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பதினெட்டு வயதான குறித்த மாணவி இரத்தினபுரியில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருகின்றார். சம்பவ தினத்தன்று அவரது தாயார் வெளியே சென்றிருந்த வேளை, புடவை ஒன்றின் மூலம் குறித்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெளியில் சென்றிருந்த மாணவியின் தாயார் வீடு திரும்பியபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தனது மகளைக் கண்டதும் கூச்சலிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அயலவர்களின் துணையுடன் மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றநிலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் ஒன்றினாலேயே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.