பிரட்மனுக்கு அடுத்த சிறந்த வீரர் சச்சின் தான் : கிளாக்!!

388

clarkeகிரிக்கெட்டின் சகாப்தம் என்றழைக்கப்படும் இந்திய துடுப்பாட்ட வீரர் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு முடிவை அறிவித்த பின்பு முன்னாள் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் சச்சினை பாராட்டி வருகிறார்கள்.

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கல் கிளாக்கும் சச்சினை வெகுவாக பாராட்டி உள்ளார். நவீன கிரிக்கெட் சகாப்தத்தில் சச்சின் தான் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கிளாக் கூறுகையில் டெண்டுல்கரின் ஓய்வு கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் தலைமுறையில் அவர் தான் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

நான் பார்த்த மற்றும் விளையாடிய வீரர்களில் டெண்டுல்கரே உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றில் பிரட்மனுக்கு பின்னர் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆவார். அப்படிப்பட்ட சிறந்த வீரரின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

எல்லாவிதமான பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக எதிர் கொள்ளக்கூடிய திறமை டெண்டுல்கரிடம் இருக்கிறது என்றும் இதனால் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது எனவும் கூறியுள்ளார்.