மீரிகம பகுதியில் பெண் ஒருவர் தனது மகளின் கணவரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் அவரது தாயாரை அடித்து துன்புறுத்துவதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அன்றும் அவர் அவ்வாறே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மாமியாரின் தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர் போத்தலை – இகலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவராகும். மேலும், இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






