ஸ்ரீ மஹா விஸ்ணு அறக்கட்டளையினரின் ஒழுங்கமைப்பில் 26.11.2017 காலை 9.00 மணியளவில் கோவில்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் கிராம மக்களின் பங்களிப்புடன் சிரமதான பணிகளை மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த கோவில்குளம் இந்துமயானம் தற்போது முதற்கட்டமாக சிரமதான நடவடிக்கையொன்றின் மூலம் துப்பரவு செய்யப்படுவது பாராட்டத்தக்க விடயம் என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர் .
அதேபோன்று கோவில்குளம் இந்து மயானம் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடனும் கிராம அபிவிருத்தி சங்கம் இளைஞர் கழகங்கள் என்பற்றின் பங்களிப்புடனும் தொடர்ச்சியாக புனரமைப்பு செய்யப்பட்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கபட வேண்டுமெனவும் தெரிவித்தனர்.