மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் உயிரிழப்பு : வெவ்வேறு பகுதிகளில் கரையொதுங்கிய சடலங்கள்!!

632

தொடந்துவ மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் படிக்கச் சென்ற படகு ஒன்றில் இருந்த 05 மீனவர்கள் விபத்துக்கு உள்ளாகியதாக படகு கண்காணிப்பு மத்திய நிலையம் கூறியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு மூனவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மீனவரின் சடலம் அம்பலாங்கொட பட்டபெதிமுல்ல கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொரு மீனவரின் சடலம் அதுரல கடலோரத்தில் கரையொதுங்கியுள்ளது.