மாதம்பை – சுதுவெல்ல பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று முற்பகல் பழைய இரும்புகளை சேகரித்து மொத்தமாக விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




