அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
வௌிநாட்டு ஜோடி ஒன்று கடலுக்கு குளிக்கச் சென்ற வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பிரதேசவாசிகளால் பெண் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய உக்ரைன் நாட்டுப் பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸாருடன் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.






