ஆஜென்டினாவில் இரண்டு வயது குழந்தையை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜெண்டினாவின் ப்ளோரின்சியோ வரீலா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
கரீனா கோமீஸ் (26) என்ற பெண் தனது பெண் குழந்தை மிலீனா (2) மற்றும் உறவுக்கார பெண்ணுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வேலை எதுவும் செய்யாத கரீனா அரசாங்கம் தரும் மானியத்தை நம்பியே வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது குழந்தை மலீனாவுக்கு உணவளிக்க முடியவில்லை என வருத்தப்பட்ட கரீனா, இதன் காரணமாக குழந்தை பாதிக்கபடுவதை தடுக்க கொலை செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி மிலீனாவின் கைகளை சொக்ஸால் கட்டி பின்னர் மூச்சு திணறடித்து கொன்றுள்ளார். இது குறித்து கரீனாவுடன் அதே வீட்டில் வசிக்கும் உறவினர் கூறுகையில்,
தனது அறையிலிருந்து சில மணி நேரம் கழித்து போர்வையில் குழந்தையை சுற்றி எடுத்தபடி கரீனா வெளியில் வந்தார். பின்னர் வீட்டிலிருந்து சாலையில் ஓடினார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து மலீனாவை மீட்டோம்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்களால் மலீனாவை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் கரீனாவை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






