சவுதியில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

720

கொலை மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதில் ஆறு பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்கள். இவர்கள் ஒரு குழுவாக உருவாகி சவுதியின் அசிர் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து ஒரு பெண் உட்பட மூவரை கொலை செய்துள்ளனர்.

அப்போது வீடுகளில் இருந்த பணம் மற்றும் சில பொருட்களையும் திருடியுள்ளனர். இந்த குற்றங்கள் நிரூப்பிக்கப்பட்டதால் ஆறு பேருக்கும் Abha நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஏழாவது நபர் சவுதியை சேர்ந்தவராவார். இவர் போதை மாத்திரைகளை கடத்தியாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அது நிரூபிக்கப்பட்டதால் தபூக் நகரில் அவருக்கு மரண தண்டனை தரப்பட்டது.

இந்த தண்டனைகள் அனைத்தும் கடந்த செவ்வாய்க் கிழமை நிறைவேற்றப்பட்டது. இது போன்ற குற்றங்களுக்கு சவுதியில், பொது மக்கள் மத்தியில் குற்றவாளியின் தலை வாளால் வெட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.