பந்து தேடிச் சென்ற சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

536

arrest1சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு வயதான சிறுவன் ஒருவர் புத்தளம் கற்பிட்டியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் குறித்த இளைஞனது வீட்டிற்கு முன் விளையாட்டிக் கொண்டிருந்த நிலையில் பந்து ஒன்றை தேடி இளைஞனின் வீட்டு சூழலிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுவனை சமையலறைக்கு அழைத்துச் சென்ற இளைஞன் அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் பாதுகாப்பாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைகளுக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.