இயற்கை சீற்றம் : 13 பேர் பலி, 5 பேர் மாயம்!!

373

சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பலன்கொட ஊருவத்தை பகுதியில் வசித்த 39 வயதான ஒருவரும், அங்குறல பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் பலப்பிட்டிய மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மரண விசாரணைகள் இன்று இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.