இளம்பெண்ணை அசிட் குடிக்கவைத்து கடலில் தள்ளிக் கொலைசெய்ய முயன்ற வாலிபர்!!

1462

murder-attemptஇந்தியாவின் மும்பையில் ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி அசிட் குடிக்க செய்து பின்னர் அவரை கடலில் தள்ளிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை டஹிசார் பகுதியில் வசித்து வரும் 18 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக ஜிதேந்திர சக்பல் என்னும் 20 வயது நபர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் அவளது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த நபர் மீது பொலிசில் புகார் அளித்தனர்.

அந்த நபரை விசாரித்த பொலிசார் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது என மிரட்டி எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண் வீடு திரும்புவதை பார்த்த ஜிதேந்திர சக்பல், அவரை வழிமறித்து அசிடை குடிக்கசெய்து பின்னர் அவரை கடலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.