இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என இந்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.





