குறுந்தகவல் ஒன்றினால் கணவன் – மனைவிக்கு இடையில் நேர்ந்த விபரீதம்!!

257

வரக்காப்பொலயில் குறுந்தகவல் ஒன்றினால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தனது கணவரின் தொலைபேசிக்கு பிறிதொரு பெண் ஒருவரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் குறித்து மனைவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் கணவர் வாகனங்களுக்கு பயன்படுத்தும் பிரேக் எண்ணெயை பருகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வரக்காப்பொல, கோதாபாளுவ கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பிரேக் எண்ணெயை பருகிவிட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறுந்தகவலை அடிப்படையாக கொண்டு மனைவியுடன் ஏற்பட்ட மோதலின் போது கொதிக்கும் எண்ணெயை மனைவியின் காலில் ஊற்றியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, கணவர் தனது கையிலிருந்த பிரேக் எண்ணெய்யை பருகியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மனைவியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.