1 கோடிக்கு ஆசைப்பட்டு 50 லட்சம் ரூபாயை இழந்த நடிகர்!!

533

Akshaye Khannaபொலிவுட் உலகின் முன்னணி நடிகரான அக்ஷய் கண்ணா ஒரு 1 கோடிக்கு ஆசைப்பட்டு 50 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பை அந்தேரியில் இன்டேஜ் இமேஜஸ் என்று ஒரு நிறுவனம் உள்ளது.

சக்கரவர்த்தி என்பவர் தன் மனைவி சோனாவுடன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு இவர் இன்டேக் இமேஜஸ் நிறுவனத்தில் 50 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 45 நாட்களில் 1 கோடியாக திருப்பித் தரப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனை நம்பி சில பணக்காரர்கள் 50 லட்சம் கொடுத்தனர். பிரபல நடிகர் அக்ஷய் கண்ணாவையும், சக்கரவர்த்தி– சோனா தம்பதி அணுகி 50 லட்சம் முதலீடு செய்யும்படி ஆசை காட்டியுள்ளார்கள்.

45 நாட்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் அக்ஷய் கண்ணாவும் 50 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

45 நாட்கள் கழித்து 1 கோடி வாங்கலாம் என்ற ஆசையில் நடிகர் அக்ஷய் கன்னா இன்டெக் இமேஜஸ் உரிமையாளர் சக்கரவர்த்திக்கு போன் செய்துள்ளார்.

ஆனால் சக்கரவர்த்தி இப்போது 1 கோடி தர முடியாது என்றும் கொஞ்சம் பொறுங்கள் உங்கள் பணத்தை மீண்டும் முதலீடு செய்துள்ளோம். விரைவில் 1.5 கோடியாக தருகிறோம் என 3 வருடங்களாக கூறி வந்துள்ளார்.

இதனால் சக்கரவர்த்தி– சோனாவின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மலபார் ஹில் பொலிஸ் நிலையத்தில் அக்ஷ்ய் கண்ணா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தம்பதியினரை அழைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.