யானைத் தாக்குதலில் இருவர் படுகாயம்!!

248

திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், நேற்று (05.12) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த எச்.எம்.கிரிபண்டா (60 வயது) மற்றும் அவரது மருமகனான கே.அபேரத்ன (32 வயது) என கூறப்பட்டுள்ளது.

இருவரையும் சிகிச்சைக்காக, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், மின்வேலிகளை அமைத்துத் தருமாறு மஹதிவுல்வெவ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.