இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை: பிசிசிஐ!!

307

BCCI-Indiaஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மீதமுள்ள நான்கு போட்டிகள் ராஞ்சி, கட்டாக், நாக்பூர் மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் மொகாலியில் நடந்த மூன்றாவது போட்டியில் ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் வழங்கி தோல்விக்கு வித்திட்ட வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் மூன்று போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட அதே வீரர்கள் மீதமுள்ள நான்கு போட்டியிலும் விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ தெரிவுக்குழு அறிவித்துள்ளது.