கிரிக்கெட்டில் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் சச்சின் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு குறித்து முன்னாள் அணித்தலைவர் டிராவிட் கூறுகையில், சச்சின் தனக்கென தனி தர முத்திரையை நிர்ணயித்துக் கொண்டு அதில் இருந்து கொஞ்சமும் கீழே இறங்கிவிடாமல் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியவர்.
கடந்த 24 ஆண்டுகளாக பல கோடி இளம் வீரர்களுக்கு முன்னுதாரண நாயகனாக விளங்கி வருகிறார். நாமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை என்னுள் விதைத்து தூண்டுகோலாக இருந்தவர்.
அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் இயற்கை அதற்கு ஒத்துழைக்காது என்பதையும் உணர்ந்துள்ளேன் இதுதான் வாழ்க்கை.
அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்கு இதுதான் சரியான தருணம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.
எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அனுபவித்து விளையாட வேண்டும்.
அவரது குடும்பத்தினருக்கும் இது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.