வங்கி அதிகாரியை மணந்தார் நடிகை அனிதா!!

310

anithaவிக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் வருடம் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அனிதா. இப்படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் சில வருடங்கள் வாய்ப்பில்லாமல் போனதால் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்தார். பின்னர் ரித்திஷ் நடிப்பில் வெளிவந்த நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பி வந்தார். அதன்பிறகு நாசர் ஜோடியாக மகராஜா படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகி இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இவரும் கோவாவைச் சேர்ந்த ரோஹித் ரெட்டியும் ஒரு வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். முதலில் நட்புடன் ஆரம்பித்த இவர்கள் உறவு பின்பு காதலாகி தற்போது இருவீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் கடந்த 14ம் திகதி கோவாவில் கோலாகலமாக நடந்தது. வைதீகப் முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நான்கு நாட்கள் நடந்தது. ரோஹித் ரெட்டி கார்ப்பரேட் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார்.