சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும்!!

339

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய சுரக்ஸா காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்தும் நிகழ்வு நேற்று (07.12) கொழும்பு அனுலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற போது கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் போது ஒன்பது பாடங்கள் தற்போது கட்டாய பாடங்களாக காணப்படுகின்றன. இந்த பாடங்களின் எண்ணிக்கையை ஆறாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இதேவேளை, கல்வித்துறையில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.