வவுனியா நெளுக்குளம் கலைமகள் பாடசாலையில் இன்று (08.12) காலை 7.45 மணியளவில் பாடசாலை அரங்கில் பாடசாலையின் அதிபர் ப.சிவநாதன் தலைமையில் மாணவர்களுக்கு நெளுக்குளம் போக்குவரத்து பொலிசாரினால் சைகைகள், போக்குவரத்து விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று 25 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். அத்தநாயக்க கடமையில் ஈடுபடும் மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து மழை, வெயில் பாராது நேரகாலத்திற்கு வந்து தமது கடமையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3வருடங்களாக இவ்வாறான சேவையை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
இனிவரும் காலங்களிலும் இவ்வாறான சேவையை தொடர்ந்து செய்வோம். இவ்வாறான சேவையினால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சி.எச்.எம்.மாதுண்ன, பொலிஸ் பரிசோதகர், எஸ். ஜி.ஆர்.பிரியந்தகுமார, பாடசாலையின் உப அதிபர், அசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.