கல்முனை – பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டிருப்பு, திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சசிகரன் ஜெனிதாவின் நான்கு வயது மகன் கபிஸ்கரனே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பம் கடந்த சில காலமாக பெரிய நீலாவணையில் வாடகைக்கு வசித்து வந்த நிலையிலேயே சிறுவன் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான்.
இதனைத் தொடர்ந்து சிறுவன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நான்கு வயது சிறுவனின் பரிதாப மரணம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.