குடியைக் கண்டித்த புது மனவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!!

606

Knifதிருப்பூர் நகரிலுள்ள சுண்டமேடு குப்புசாமி காம்பவுண்டை சேர்ந்தவர் அசோக் (28). இவரது மனைவி கவிதா (25). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும், 4 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.

இருவரும் திருப்பூருக்கு வந்து அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அசோக், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை கவிதா கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் அசோக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதற்காக கவிதா அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இதனால் அவமானமடைந்த அசோக், மனைவி சத்தம் போடுவது பக்கத்து வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்க தன்னுடைய வீட்டிலிருந்த ரேடியோவில் சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு வீட்டை உள்பக்கமாக பூட்டி தாளிட்டுள்ளார்.

அதன் பின் கவிதாவுடன் சண்டை போட்டுள்ளார், பின்னர் வெறியிலிருந்த அசோக் கத்தியால் கவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அதன் பின் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் படுத்ததும் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விட்டார். நேற்று காலை வீடு திறக்காததால் பக்கத்து வீட்டார் கவிதாவை அழைத்துள்ளனர்.

எவ்வித சத்தமும் வராததால் சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்தபோது கழுத்து அறுபட்ட நிலையில் கவிதா பிணமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அசோக்கை தேடி வருகின்றனர்.