பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமியின் குழந்தையை தத்தெடுத்த தம்பதி!!

670

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பத்து வயது சிறுமியின் குழந்தையை மஹாராஷ்டிரத் தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர்.

சண்டிகரைச் சேர்ந்த பத்து வயதே ஆன சிறுமி தன் தாய் வழி மாமாக்கள் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்தார், அவளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தையும் பிறந்தது.

அக்குழந்தையை வெளிநாட்டு தம்பதி தத்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் குழந்தைகள் நல வாரியத்தின் சேர்மன் சங்கீதா வர்தன் அதை மறுத்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவை சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர், எனினும் குழந்தையின் நலன் பற்றி சண்டிகரில் உள்ள தத்தெடுப்பு நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வரும் என தெரியவந்துள்ளது.

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.