வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் அதிரடி திட்டம்!!

511

வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான், நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா சிம்ம சொப்பனமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அணு குண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

சமீபகாலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி வடகொரியா சோதனை நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் நிலப்பரப்பின் மீது பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை அடைகிறது.

எனவே வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் ஜெ.ஏ.எஸ்.எஸ்.எம். மற்றும் எல்.ஆர்.ஏ.எஸ்.எம். எனப்படும் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.

900 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து செலுத்தலாம். அதே போன்று 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் காங்ஸ்பெர்க் என்ற ஏவுகணையை நோர்வேயிடம் இருந்து வாங்குகிறது.

இத்தகவலை ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்ஸ்னோரி அனோடெரா தெரிவித்துள்ளார்.