மின்சாரம் தாக்கி இராணுவச் சிப்பாய் பலி!!

465

பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முகாமில் இருக்கும் தடாகத்தில் மின் கோளாரை சரிசெய்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர் பன்னிப்பிடிய – பெலன்வத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதான இராணுவச் சிப்பாய் ஆகும்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.