இறக்குவானை பிரதேசத்தில் பெய்த சிவப்பு மழை!!

641

redrainஇறக்குவானையில் தெமுவாவத்த கிவுல்எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சிவப்பு மழையை சேகரித்த பிரதேசவாசிகள் இறக்குவானை பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து கிவுல்எல்ல கிராமத்திற்குச் சென்ற பொலிஸார் சிவப்பு மழை நீரைப் பெற்று பரிசோதனைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 5 நிமிடங்கள் சிவப்பு மழை பெய்ததாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கொடக்கவெல பொது சுகாதார பரிசோதகர் பிரிவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.