வவுனியாவின் சமூக ஆர்வலர்கள் ஒழுங்கு படுத்தலில் விவசாயிகள் தினம் நேற்று வவுனியாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டள்ளது.
இத்தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்றப்படட கிராமமான கள்ளிக்குளத்தில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவாகளுக்கு தேவையான உதவிகைளயும் வழங்கியிருந்தனர்.
இதேவேளை மீள்குடியேறிய மக்களிற்கான உலருணவு பொதிகளை வழங்கியுள்ளதுடன் பொதுமக்களின் காணிகளில் பயன்தரு மரங்களையும் நாட்டியும் வைத்துள்ளனர்.
இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வரியிறுப்பாளர் சங்க தலைவர் செ.சந்திரகுமார், கலைஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான கனிசியஸ், கோ.சிவநேசன் உட்பட வவுனியா பாடசாலை சாரணர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






