யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும் : நீதிபதி இளஞ்செழியன்!!

1275

யாழ்.மாவட்­டத்­திற்கு இன்­னு­மொரு மேல் நீதி­மன்றம் பருத்­தித்­து­றையில் அமைக்கப் பட வேண்டும். பருத்­தித்­துறை­யானது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்­கின்­றது. புதிய மேல் நீதி­மன்றம் அமைப்­பதன் மூலம் கிளி­நொச்சி தொடக்கம் வலி­காமம்வரை நீதி நியா­யா­திக்க வலயம் அமை­யலாம் என நினைக்­கின்றேன்.

இந்த விடயம் குறித்து நீதி அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டுவேன் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்செழியன் தெரி­வித்தார்.

நீதி­ய­மைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்­கீட்டின் கீழ் பருத்­தித்­துறை நீதி­மன்ற வளா­கத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்கப்­பட்ட மாடிக்­கட்­டடத் திறப்பு விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை பருத்­தித்­துறை மாவட்ட நீதி­பதி பெ.சிவ­குமார் தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு கட்­ட­டத்தை திறந்துவைத்து உரை­யாற்று கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் முனை­யாகச் செயற்­படும் பூமி பருத்­தித்­து­றை­யாகும். இங்கு படித்­த­வர்கள் அதிகம் வாழு­கின்­றனர். வட­ம­ராட்­சியில் சரஸ்­வ­தியும் தீவ­கத்தில் செல்வ இலக்­சுமியும் சிறந்து விளங்கும் பூமி என்று சட்­ட­மேதை அமரர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் அன்று கூறி­யி­ருந்தார்.

இப்­பு­திய கட்­டடம் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட போது இதனைத் திறந்­து­வைக்க ஜனா­தி­பதி, அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச மற்றும் நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள ஆகியோர் வரு­கை­தர இருப்­ப ­தாக அவ்­வப்­போது தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக அவர்­களால் வர­மு­டி­ய­வில்லை. எனினும் இக்­கட்­ட­டத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற நோக்­கோடு நீதி­ய­மைச்சின் அனு­ம­தி­யுடன் திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.

பருத்­தித்­துறை நீதி­மன்­றத்­துக்­கு­ரிய முன்னர் நீதி­பதி இல்லம் அமைந்­தி­ருந்த காணியை படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இது­கு­றித்து நான் யாழ்.கட்­டளைத் தள­பதி தர்­சன ஹெட்­டி­யா­ரச்­சி­யுடன் கலந்­து­ரை­யாடி அக்­கா­ணியை விடு­விக்க என்­னா­லான முயற்­சி­களை மேற்­கொள்வேன். இக்­காணி விடு­விக்­கப்­பட்டால் அங்கு புதி­தாக இரண்­டா­வது வல­ய­மாக உரு­வாக்­கப்­படும் மேல் நீதி­மன்­றத்தை அமைக்க முயற்­சிக்­கலாம் எனவும் நினைக்­கின்றேன். இது தொடர்பில் நீதி அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டுவோம். எதிர்­கா­ல­த்தில் நீதித்­து­றைக்கு செய்ய வேண்­டி­யதை செய்வோம்.

அதி­கா­ரத்தில் இருக்­கும்­போது அதைப் பாவிக்க வேண்டும். அதி­கா­ரத்தை பாவிக்க தெரி­யா­த­வர்கள் பத­வியில் இருப்­பதால் அப்­ப­தவி அவ­சி­ய­மில்லை. நான் சமூக நீதிக்­காகப் பாடு­ப­டு­கிறேன். எனக்கு சரி என்று பட்­டதை செய்வேன். நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். அதா­வது பிரச்­சி­னைகள் இருந்தால் உட­ன­டி­யாகப் பேச்­சு­வார்தை மேற்­கொண்டு சுமு­க­மாகப் பிரச்­சி­னை­களை முடிக்க வேண்டும். எனது கட­மை­களை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­திற்கும் யாழ்.மாவட்­டத்­துக்கும் மேற்­கொள்வேன் என்றார்.

இங்கு உரை­யாற்­றிய யாழ்.சட்­டத்­த­ர­ணி கள் சங்கத் தலைவி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி செல்வி சாந்தா அபி­மன்­ன­சிங்கம் பேசு­கையில், பருத்­தித்­து­றையை பொறுத்­த­வரை விசா­ல­மான இடத்தில் கடற்­கரை சூழலில் இரு நீதி­மன்­றங்கள் அமைந்­துள்­ளன. இந்­நீ­தி­மன்­றங்­களின் நீதி­ப­தி­க­ளுக்­கான வாசஸ்­தலம் கடற்­க­ரை­யுடன் அமைந்­தி­ருந்­தது. குறிப்­பிட்ட வாசஸ்­தல காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து மீட்­டு­ டெ­டுக்க கோரிக்கை முன்­வைத்தோம். அது சரிவர­ வில்லை. இப்­போது இன்­ னமும் காலம் போக­வில்லை. எனவே இக்­கா­ணியை மீளப்­பெற்று நீதி­மன்றக் கட்­டடம் அமைய வேண்டும். இலங்­கை­யி­லுள்ள நீதி­மன்­றங்­களில் நீர்­கொ­ழும்பு நீதி­மன்றக் கட்­டடம் சிறப்­பாக அமைந்­துள்­ளது. அதே­போன்று மிகச் சிறந்த இட­மான இவ்­வி­டத்­திலும் நீதி­மன்றம் அமைய வேண்டும் என்றார்.

பருத்­தித்­துறை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­த­லைவர் கே.முத்­து­குமார் பேசு­கையில், புதிய கட்­ட­டத்­திற்­கான பணிகள் 2011 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு 2016 ஆம் ஆண்டு நிறை­வுற்­றது. பருத்­தித்­துறை நீதி­மன்றக் கட்­ட­ட­மா­னது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அதா­வது 1936 ஆம் ஆண்டு கட்ட ஆரம்­பித்து 1940 ஆம் ஆண்­டி­லேயே நிறை­வுற்றது. இக்­கட்­டடம் பூர்த்­தி­ய­டை­வ­தற்கு முன்னர் இங்கு கட­மை­யாற்­றிய நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­கரன், எமது சட்­டத்­த­ர­ணிகள் சங்க முன்னாள் செய­லாளர் பொ. குமா­ர­சாமி ஆகி­யோரின் முயற்­சியே கார­ண­மாகும். இக் கட்டடத்தில் தபாலகம், இலங்கை வங்கி ஆகியவற்றின் கிளைகள் நிறுவப்பட இருந்தன. ஆனால் இந்த வசதிகள் இப்போது இல்லை. இது குறித்து நீதி அமைச்சிடம் முறைப்பாடு செய்தோம். எனினும் இரண்டாம் நிலையாகவே எம்மை நீதியமைச்சு பார்க்கிறது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னைய காலங்களில் பணியாற்றிய பல நீதிபதிகள் உயர் நீதிமன்றம் வரை நீதிபதிகளாக பதவி யுயர்வு பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பாக சில்வா வைத்தியலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா போன்ற நீதிபதிகளை குறிப்பிடலாம் என்றார்.