யாழ். புன்னாலைகட்டுவான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 5ஆம் திகதி குறித்த சிறுமியை அவரது உறவினர் ஒருவர், சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியை காணாத பெற்றோர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். எவ்வாறாயினும், சிறுமியை உறவினர் அழைத்து சென்று வவுனியாவில் தங்க வைத்திருப்பதை பெற்றோர் அறிந்துகொண்டனர்.
இந்நிலையில், உறவினர்களை கைது செய்த சுன்னாகம் பொலிஸார், சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்டுபடுத்தப்படவில்லை என்பது வைத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.