தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இராமியம்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் ஆனந்தன் (40). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர் மீது பொலிஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆனந்தன் இராமியம்பட்டியில் இரவில் வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு அந்த வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் புகுந்து பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தீர்த்தகிரி என்பவரின் வீட்டில் நுழைந்து, அவரது மனைவி சரோஜா(60) என்பவரை பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றுள்ளார். விழித்தெழுந்த சரோஜா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்ததில் ஆனந்தன் மூதாட்டியுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் விரட்டியதில் அங்கிருந்து ஆனந்தன் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து சரோஜா கொடுத்த புகாரின் படி பாப்பிரெட்டிப்பட்டி பொலிஸார் வழக்கு பதிந்து தப்பிஓடிய ஆனந்தனை கைது செய்துள்ளனர்.





