கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு ஏற்பட்டுள்ள மரபணு குறைபாட்டால், பீச் பழங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறான்.
மிகா கேப்ரியல் என்னும் 2 வயது சிறுவனே, மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணு குறைபாட்டால் ஏற்பட்டதால், பீச் பழங்களைத் தவிர எந்த உணவை சாப்பிட்டாலும் இவனின் உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம்.
இது குறித்து கேப்ரியலின் தாயார் கூறுகையில், ‘ஆறு மாதங்களுக்கு முன்பு தான் இவனுக்கு இந்தப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. மிகவும் அன்பான குழந்தை, எதையும் சாப்பிட முடியாமல் தவிக்கிறான்.
உரம் போடாமல், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பீச் பழங்கள் ஆண்டு முழுதும் கிடைப்பதில்லை. எனினும், பழங்கள் கிடைக்கும் காலத்தில் வாங்கி, மீதி காலத்துக்குப் பயன்படுத்துகிறோம். இதற்கு அதிக செலவாகிறது. எங்களிடம் வசதி இல்லாததால், செலவுகளை சமாளிக்க நன்கொடை திரட்டி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.