வவுனியாவிலுள்ள கிரவல் வீதிகளுக்கு தார் போடும் நடவடிக்கை : மக்கள் விசனம்!!

388

 
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் பகுதியிலுள்ள கிரவல் வீதிக்கு இன்று (12.12.2017) தார் போட்டு வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது.

வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் வீதியில் பாவற்குளம் வைத்தியசாலையிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்திற்கு வெறும் கிரவல் வீதிக்கு தார் போட்டு வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள குறித்த வீதி சரியான முறையில் செப்பனிடப்படவில்லை மழை பெய்யும்போது மழைநீரில் தார் கழுவிச் சென்றுவிடும் என்றும் குறித்த வீதியை சரியான முறையில் செப்பனிடப்படல் வேண்டுமே தவிர அவசரமாக இவ்வாறு மேற்கொள்வதால் திரும்பவும் குறித்த வீதி செப்பனிடப்படவேண்டும் இதன் காரணமாக செலவுகளே அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே குறித்த வீதி செப்பனிடும் பணிகளை நிறுத்தி உரியமுறையில் வீதியைச் செப்பனிட்டுத்தருமாறு அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.