பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் விசிட் வீசா..

433

british-flag

பிரித்தானியாவுக்கு ஐந்து நாட்களில் “விசிட் வீசா” பெற்றுக் கொள்ளும் புதிய நடைமுறையொன்று இம்மாதம் 24 ஆம் திகதி முதல் பின்பற்றப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கிலேயே இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகக் கட்டணமாக 10000 இலங்கை ரூபாவினை செலுத்துவதன் மூலம் ஐந்து வேலை நாட்களுக்குள் வீசா விண்ணப்பத்திற்கான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு- உரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் வீசா வழங்கப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மாணவர் வீசாக்களின் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.