குளிப்பதை பார்த்துவிட்டார் : தமிழக ஆளுநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!!

300

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணிகள் குறித்து கடலூரில் ஆய்வு மேற்கொண்டபோது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார்.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த கீற்று மறைப்பில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார். இதனை கவனிக்காத ஆளுநர், கீற்று மறைப்பிற்குள் நுழைந்துள்ளார், இதனால் அப்பெண் கத்தி கூச்சலிட்டதையடுத்து ஆளுநர் அங்கிருந்து அழைத்துசெல்லப்பட்டார்.

இந்நிலையில், தாம் குளிக்கும் போது ஆளுநர் அத்துமீறி நுழைந்து பார்த்துவிட்டதாக அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் புகாரால் இச்சம்பவத்தில் ஆளுநர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.