பிரபல தொகுப்பாளினி கொலை செய்யப்பட்டாரா? சகோதரி குற்றச்சாட்டு!!

303

 
மும்பையில் பிரபல தொகுப்பாளினி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24), பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர், தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்புக்கு நண்பரை சந்திக்க சென்றுள்ளார்.

அங்கு நடந்த பார்ட்டிக்கு பின்னர், அதிகாலை 4 மணிக்கு அனைவரும் தூங்கியுள்ளனர். ஆனால், காலை 7 மணிக்கு எழுந்த ஜாதவ், குளியலறைக்குச் சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவர் மீண்டும் வந்து படுத்து தூங்கிவிட்டார்.

மறுபடியும் எழுந்து வந்தபோதும் குளியறை பூட்டியிருந்ததால் சாவி போட்டு திறந்து பார்த்துள்ளார். உள்ளே இருந்த ஜன்னலின் கண்ணாடி தரையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அர்பிதாவை காணவில்லை.

இதனிடையே அர்பிதா 2வது மாடியின் குழாயில் அரை நிர்வாணமாக பிணமாகத் தொங்கியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அங்கு இருந்த அர்பிதாவின் நண்பர்கள், அவர் குளியலறை ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று கூறினர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலையாக இருக்கும் என அர்பிதாவின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அர்பிதாவின் சகோதரி சுவேதா சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் அர்பிதா தன்னிடம் பேசும் போது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியதாகவும், தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அர்பிதாவின் நண்பர் லக்கி சர்மா, அர்பிதாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததாகவும், அதுவே இறப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.